கல்லூரி பற்றி


தரணி போற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணியில் மக்களின் வேண்டுகோளின்படி, தமிழக அரசால் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க 14.06.2013 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி அரசாணை எண்.97 பிறப்பிக்கப்பட்டது. அதன்படி உரிய ஆய்வுகளுக்குப்பின் மாணவர் சேர்க்கைப்பணி மேற்கொள்ளப்பட்டன. மாண்புமிகு அன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் இக்கல்லூரி 13.09.2013 அன்று முதன் முறையாக தொடங்கப்பெற்று வகுப்புகள் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றன.