முதல்வரின் செய்தி

  • எங்கள் கல்லூரிக்கு அனைத்து மாணவர்களையும் வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எங்களிடம் மாணவர்களின் பன்முகத் திறன்களைக் கண்டறிந்து அவர்களின் முன்னேற்றத்திற்கான கதவுகளைத் திறக்கும் அர்ப்பணிப்புமிக்க பேராசிரியப் பெருமக்கள் உள்ளனர். ஒவ்வொரு மாணவரும் தமக்கான குறிக்கோள்களை வென்றெடுக்க இக்கல்லூரி அனைத்து விதமான வாய்ப்புகளையும், வளங்களையும், வழிகாட்டுதல்களையும் வழங்கிவருகிறது என்பதைப் பெருமிதத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
  • மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் ஆதரவு இல்லாமல் இந்த வெற்றிகரமான பயணம் சாத்தியமில்லை. கல்லூரி வளங்களைப் பயன்படுத்துவதிலும் அவற்றை மேம்படுத்துவதிலும் தங்களின் பொன்னான நேரம் மற்றும் திறன்களை முதலீடு செய்துள்ள அனைத்து மாணவர்களுக்கும், அனைத்துவிதமான பணியாளர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். இக்கல்லூரியை வெற்றிப்பாதையில் தொடர்ந்து பயணிக்க வைக்க நாங்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் எங்கள்மீது முழு நம்பிக்கை வைத்து தங்களின் நல்லாதரவினை நல்கிவரும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் நன்றி கூறுகிறேன். எங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் மனங்களைப் பண்படுத்தி, ஆன்மாவை வலிமையாக்கி, அவர்களின் எதிர்காலம் சிறக்கத் தேவையான தன்னம்பிக்கை எனும் தீபத்தை அவர்களின் உள்ளங்களில் ஏற்றுவோம் என்று உறுதி கூறுகிறேன்.
  • நம் அனைவரின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பால் நம் கல்லூரி எப்போதும் வெற்றிபாதையில் வீறுநடை போடும்.